இலங்கையில் அதிகரிக்கும் குற்றச் செயல்கள் - நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்
Sri Lanka
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
By Jaso
இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வருட ஆரம்பத்துடன் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மொத்தத்தில், நாட்டின் அனைத்து சிறைகளிலும் 13,241 கைதிகள் அடைக்கப்படலாம், ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 29,000 ஐ எட்டியுள்ளது.
நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்

ஏறக்குறைய 19,000 கைதிகள் சந்தேகத்திற்கிடமானவர்கள் மற்றும் சுமார்10,000 கைதிகள் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளை அடைத்து வைக்கும் போக்கு அதிகரித்து வருவதாக சிறைச்சாலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்