பயணப் பொதிகளை திருடிய பெண் ஒருவர் கைது!
கட்டாரில் இருந்து வந்த விமானப் பயணி ஒருவரின் பயணப் பொதிகளை திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணை நீர்கொழும்பு நீதவானின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 5 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட வீட்டு பணிப்பெண் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவர் கட்டாரில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்ற நிலையில் அந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.
பாதிக்கப்பட்ட குறித்த பயணியும் இந்த பெண்ணும் ஒரே விமானத்தில் இலங்கை வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
விமானத்திலேயே குறித்த பயணியின் பயணப் பொதிகளை அந்த பெண் திருடிச் சென்றுள்ளார். பாதுகாப்பு கமராக்கள் சோதனை செய்யப்பட்டதையடுத்து சந்தேகநபர் சூட்கேஸ்சுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சந்தேகநபர் 5 இலட்சம் ரூபாயிற்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகளை திருடி அடகு வைத்திருந்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்திகளில் காண்க.