16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடக தடை! முன்மொழியப்பட்ட சட்டமூலம்
சிறுவர் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு தனிநபர் சட்டமூலமொன்றை புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஃபைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக குறைந்தபட்ச வயது சட்டமூலம் (Social Media Minimum Age Bill) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முன்மொழியப்பட்ட சட்டம், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடக சேவைகளை அணுகுவதைத் தடை செய்ய வலியுறுத்துகிறது.
இதேவேளை, இது குழந்தைகளின் இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், தீங்கு விளைவிக்கும் டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கு அவர்கள் ஆளாவது தொடர்பான கவலைகளைக் களைவதையும், சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு ஒரு குறைந்தபட்ச வயதுத் தேவையை அறிமுகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தைப் பருவம்
அதன்படி, இந்தச் சட்டம் இயற்றப்பட்டால், இலங்கையில் சமூக ஊடக அணுகலுக்கான குறைந்தபட்ச வயதை நிர்வகிக்கும் ஒரு சட்டக் கட்டமைப்பு நிறுவப்படும்.

இதன் மூலம், சமீப மாதங்களில் இதேபோன்ற கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்திய அல்லது பரிசீலித்து வரும் பல நாடுகளின் வரிசையில் இலங்கையும் இணையும் என கூறப்படுகிறது.
இதேவேளை, சமூக ஊடகத் தளங்கள் மீதான தடையால் சிறுவர்கள் அவர்களின் குழந்தைப் பருவம் திரும்பக் கிடைக்கும் எனவும் இணையத்தில் தேவையற்ற முறையில் உலாவக் குறைந்த நேரமும், விளையாட அதிக நேரமும் கிடைக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 8 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்