பிரான்ஸில் பதிவான முதல் எபோலா வைரஸ் தொற்று!
காங்கோவில் மனிதாபிமானப் பணி முடித்துவிட்டு பிரான்ஸ் திரும்பிய வைத்தியர் ஒருவருக்கு எபோலா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நோய்ப் பரவல் நிலைமையில் இதுவே அந்நாட்டில் பதிவான முதல் எபோலா பாதிப்பு என பிரான்சின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தங்களின் தேசிய எல்லைக்குள் எபோலா வைரஸ் நோயின் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டதை இன்று உறுதிப்படுத்துவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய மக்களுக்கான ஆபத்து
இதன்படி, குறித்த நோயாளி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தொடர்புகளைக் கண்டறிந்து வருவதாகவும் அமைச்சு கூறியுள்ளதுடன், பொதுவாக ஐரோப்பிய மக்களுக்கு ஏற்படும் ஆபத்து குறைவு என்றும் தெரிவித்துள்ளது.

Image Credit: Al Jazeera
இவ்வாறானதொரு பின்னணியில், 1,000-க்கும் மேற்பட்டவர்களைப் பாதித்து, 267 பேரைக் கொன்ற காங்கோவின் எபோலா நோய்ப் பரவலானது, கண்டறியப்பட்ட எந்தவொரு காலக்கட்டத்திலும் முதல் மாதத்திலேயே அதிக எண்ணிக்கையிலான உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளைக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 9 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்