வவுனியால் வீட்டிலிருந்து திருடப்பட்ட தாலிக்கொடி உட்பட்ட நகைகள் : சிக்கிய இளைஞன்
வவுனியாவில்(vavuniya) இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் இன்று(04) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர்.
வவுனியா, சோயா வீதியில் உள்ள வீடு ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டில் வசித்து வந்தவர்கள் வவுனியா தலைமை காவல்நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தனர்.
குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை
முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
மீட்கப்பட்ட நகைகள்
இதன்போது வவுனியா, ஓமந்தை, புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் வசிக்கும் 33 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தாலிக்கொடி, சங்கிலி, காப்பு, மோதிரம் உள்ளிட்ட 66 இலட்சத்து 33 ஆயிரத்து 800 ரூபாய் பெறுமதியான 25 அரைப் பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின் இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



