காற்றாலை மின் உற்பத்திக்கு எதிராக வீதிக்கிரங்கிய பொதுமக்கள்!
மன்னார் தீவு பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்ப தெரிவிக்கப்பட்ட பின்னணியில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்து திட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி பா.டெனிஸ்வரன்,
அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டமையினால் காற்றாலை மின் திட்ட எதிர்ப்பை சட்ட ரீதியாக அணுக வேண்டி இருக்கின்றது.
அடிப்படை மனித உரிமை வழக்கு
இவ்விடயம் தொடர்பாக நாங்கள் ஏனைய சட்டத்தரணிகளுடனும் உரையாடி இருக்கின்றோம்.
எதிர் வரும் புதன்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை வழக்கு ஒன்றை தாக்கல் செய்து சில கட்டளைகளை பெற்றுக்கொள்ள உள்ளோம்.
எவ்வித ஆவணங்களும் இல்லாமல் உடனடியாக மாவட்ட நீதிமன்றத்தை நாடுகின்ற போது எமக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தும்.
எனவே எதிர்வரும் புதன்கிழமை வரை மக்களின் எதிர்ப்பை முன்னெடுக்கவேண்டிய தேவை உள்ளது.
குறித்த நடவடிக்கைகளுக்கு எதிராக நீதி மன்றத்தின் கட்டளையை பெற்றுக் கொள்ளும் வரை எமது நடவடிக்கைகளை தொடர வேண்டும்.
திட்டங்களினால் எதிர்கால சந்ததிகள் பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க உள்ளனர்.
சட்ட ரீதியாக நடவடிக்கை
இந்த நிலையிலே விடயம் தொடர்பாக சட்ட ரீதியாக சில நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட ரீதியில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் குறுகிய நேரத்தில் அதனை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலின்போது மன்னாருக்கு வருகை தந்து கூறியிருந்தார்.
மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை மின் உற்பத்தி திட்டம் முன்னெடுக்கப்படாது என்று குறித்த திட்டத்திற்கு தடை விதிக்கப்படும் என கூறி இருந்தார்.
இந்த நிலையிலே குறித்த திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனினும் மக்களின் ஒத்துழைப்பு எமக்கு தேவை என கருதியே இதனை தெரிவித்தார்’’ என கூறியுள்ளார்.




