மட்டக்களப்பில் கோர விபத்து! தலைகீழாக கவிழ்ந்த வான்
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka Police Investigation
By Sathangani
மட்டக்களப்பு (Batticaloa) - ஓட்டமாவடி பிரதான வீதியில் வான் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று (10) காலை தியாவட்டவான் அறபா வித்தியாலயத்திற்கு முன்னாலுள்ள நீரோடையில் கவிழ்ந்து குறித்த வான் விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பில் (Colombo) இருந்து வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனைப் பகுதியை நோக்கி வந்த வான் ஒன்றே இவ்வாறு தலைகீழாக கவிழ்ந்துள்ளது.
காவல்துறையினர் விசாரணை
வான் வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினரின் விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.
இந்தநிலையில், வானில் பயணித்தவர்கள் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்தறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

4ம் ஆண்டு நினைவஞ்சலி