வீதியில் வெட்டப்பட்ட கிடங்கில் விழுந்து இளைஞன் படுகாயம் (படம்)
வவுனியாவில் வீதியில் வெட்டப்பட்ட கிடங்கில் விழுந்து இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
வவுனியா பெரியதம்பனை பண்டிவிரிச்சான் வீதி புனரமைப்பு பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் குறித்த வீதியில் பாலங்கள் அமைப்பதற்காக வீதியில் கிடங்குகள் வெட்டப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பில் பயணிகளுக்கு தெளிவூட்டும் சமிக்ஞைகள் காட்சிப்படுத்தப்படாததுடன் இரவு வேளைகளில் அவ் இடங்களில் ஒளிரக்கூடிய சமிக்ஞைகளும் காணப்படுவதில்லை.
இதன் காரணமாக அவ் வீதியால் பயணிப்போர் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில், நேற்றைய தினம் இரவு அக்கிடங்கில் விழுந்து இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இதேவேளை, வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடும் பல இடங்களிலும் இவ்வாறு சமிக்ஞைகள் காட்சிப்படுத்தப்படாதுள்ளமை தொடர்பிலும் மக்களால் வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கு தெரிவித்தும் எவ்வத பலனும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.