திருமண நிகழ்விற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த அவலம்..! மூவர் வைத்தியசாலையில் அனுமதி (படங்கள்)
Sri Lanka
Sri Lanka Police Investigation
Accident
By Pavan
திருமண நிகழ்விற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
04.11.2022 அன்று மாலை 4.30 மணியளவில் பொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியில் கெம்பியன் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பெண் ஒருவரும், சிறுவன் ஒருவனும் காயமடைந்துள்ளதாகவும், கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் வசிப்பவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பலத்த சேதம்

காயமடைந்தவர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி