தமிழர் பகுதியில் சிக்கிய விமானப்படை கோப்ரல்
மட்டக்களப்பில்(Batticaloa) வெடி பொருட்களுடன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் விமானப்படை கோப்ரல் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை வெல்லாவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் இன்று(17.03.2025) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்று அதிகாலை 2.00 மணியளவில் பாலையடிவட்டை பகுதியில் காவல்துறையினர் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
காவல்துறை விசாரணை
இதன்போது, வாகனம் ஒன்றில் மேற்கொண்ட சோதனையில் அதிலிருந்து வெடிபொருட்கள், வயர்கள், ஒரு வகையான திரவம் அடங்கிய மூன்று போத்தல்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் வாகனத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, கைப்பற்றப்பட்ட வாகனம் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான வாகனம் எனவும் குறித்த நபர்கள் புதையல் எடுக்கும் நோக்குடன் அப்பகுதிக்கு வந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் கைதானவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்