தொடருந்து - மகிழுந்து விபத்தில் விமானப்படை வீரர் பலி..!
Sri Lanka Police
Kalutara
Sri Lanka
Accident
Sri Lanka Air Force
By pavan
களுத்துறை வடக்கு பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற தொடருந்துடன் இடம்பெற்ற விபத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விமானப்படைக்கு சொந்தமான மகிழுந்தானது களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுக்கொண்டிருந்த தொடருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த விமானப்படை வீரர்கள் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாவும் களுத்துறை வடக்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீரவில விமானப்படை முகாமில் கடமையாற்றி வந்த வெல்லவாய பிரதேசத்தை சேர்ந்த விமானப்படை வீரர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் மொனராகலை புத்தல பிரதேசத்தை சேர்ந்த விமானப்படை வீரர் காயமடைந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 1 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்