இறுதியாக முடிவை அறிவித்தார் கஜேந்திரகுமார்..! முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள்
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
இதன்படி, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விடுதலை செய்யப்பட வேண்டும் மற்றும் அவசரகாலச் சட்டம் ரத்துச்செய்யப்படும் வரை ரணிலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் (10) சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து விவாதிக்க தமக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை கலந்துரையாடல்களில் பங்கேற்றக போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிரான மேற்கொள்ளப்படும் அடக்குமுறை நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.