ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இடைநிறுத்தம் : வெளியான அறிவிப்பு
இலங்கையின் ஆட்பதிவு திணைக்களம் பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல் காரணமாக நாளை (17) பொதுமக்களுக்கான எந்தவித சேவைகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய பிராந்திய அலுவலகங்களிலும் நாளை பொதுமக்களுக்கான சேவைகள் முன்னெடுக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் வேண்டுகோள்
எனவே, தமக்கான சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக, நாளைய தினம் தமது அலுவலகங்களுக்கு வருகைதர வேண்டாம் என ஆட்பதிவுத் திணைக்களம் அறிக்கை ஒன்றினூடாக பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில் விரைவில் அதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |