புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை! முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அறிவிப்பு
சிறிலங்கா அரச அதிபர் முதலில் நமது நாட்டின் தமிழ்த் தலைவர்களோடு பேசி அவர்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி வண. அம்பிட்டிய சுமனரத்ன தேரர் (Ampitiye Sumana Ratna Thero)தெரிவித்துள்ளார்.
தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதை குறிப்பிட்டார்.
இதன்போது, “சமீபத்தில் நாட்டின் தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ வெளிநாட்டில் வசிக்கின்ற புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக கூறியிருக்கிறார். இந்த விடயத்தில் உங்களின் கருத்து என்ன?” என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்த அவர்,
“ஒரு நாட்டின் தலைவர் யாரோடும் பேசலாம், முதலில் நமது நாட்டின் தமிழ்த் தலைவர்களோடு பேசி அவர்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும். அதற்குப்பிறகு புலம்பெயர் தமிழ்த் தலைவர்களோடு பேசுவது புத்திசாலித்தனமாகும்.
தீர்வை அடைவதற்கும் ஒரு ஒழுங்குமுறை வேண்டும். பேச்சுவார்த்தைகள் ஒரு தீர்வை எட்ட வேண்டும். அதே பேச்சவார்த்தைகள் இருப்பதை மோசமாக்கி விடக்ககூடாது என்பதே என் கருத்து.
ஒரு தேசிய இனத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அது தீர்க்கப்படாததால் நாடு பல தீமைகளை சந்தித்து இருக்கிறது அது இன்னும் தொடரக் கூடும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” என்றார்.
இந்த நாட்டிலுள்ள பல தலைவர்கள் பிரிவினைவாதம் பேசி நாட்டு மக்களை குழப்புகிறார்கள். கு
ழப்புவது இலகுவானது. கூட்டுவது கடினமானது என்றும் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி வண. அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.