அசுர வேகத்தில் இராணுவ கட்டமைப்பை பலப்படுத்தும் சீனா! வல்லரசுகளுக்கு மிரட்டல் விடும் ட்ராகன் தேசம்
சீனா இராணுவம்
ஏவுகணை தொழில்நுட்பம், அணு ஆயுதங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் சீனா அதி வேகமாக முன்னேறி வருவதாக மேற்கத்தைய நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இராணுவ ஆற்றலின் அடிப்படையில் உலகளாவிய ரீதியில் ஒழுங்கமைக்கபட்டிருந்த கட்டமைப்பில் பாரிய மாற்றம் நடைபெற்று வருவதும் அதில் சீனா தந்து ஆதிக்கத்தை காண்பித்துக் கொண்டிருப்பதும் கண்கூடாகின்றது.
தாய்வான் மீதான அமெரிக்காவின் வருகையை கண்டித்து அமெரிக்க அரசுடனான அணைத்து தொடர்புகளை துண்டித்தமையும், அமெரிக்கா மற்றும் தாய்வானுக்கு எதிராக போர் ஒத்திகையில் ஈடுபட்டமையும் உலக நாடுகள் மத்தியில் சீனாவை பேசுபொருளாக்கியது.
இதற்கிடையில், இலங்கைக்கு உளவுக்கப்பலை செலுத்தி இந்தியாவுடனும் முறுகல் நிலையை ஏற்படுத்தியது. இதனை ஆரம்பத்தில் மறைமுகமாக எதிர்த்த அமெரிக்கா இறுதியில் இந்தியாவுக்கு அதி நவீன தொழில்நுட்ப கருவிகளை வழங்கி சீனா மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது.
ஆக, வல்லரசான அமெரிக்கா, சீனாவின் பாதைகளில் காண்பிக்கும் எதிர்ப்புக்கள் அனைத்தும் சீனா இராணுவ ரீதியில் பலம் பெற்றுக்கொண்டு வருகின்றது என்பதற்கு சான்றாகின்றது.
2049ற்குள் உலகத் தரம் வாய்ந்த ராணுவ சக்தி
தேவையில்லாமல் இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம்..! இந்தியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த சீனா |
உண்மையில் அமெரிக்க வல்லரசுக்கு சவால் விடும் அளவிற்கு சீனா பலம் பெற்று விட்டதா எனும் கேள்விக்கு "இப்போது இல்லாது வீட்டினும் எதிர்க்காலத்தில் வல்லரசு போட்டியில் சீனா முன் நிற்கும்" என அவதானிகள் பதிலளித்துள்ளனர்.
2035ம் ஆண்டுக்குள் சீனாவின் படைகளை நவீனமயமாக்குமாறு அதிபர் ஸீ ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
2049ஆம் ஆண்டுக்குள் "போர்களில் சண்டையிட்டு வெற்றிபெறும்" திறன் கொண்ட "உலகத் தரம் வாய்ந்த" ராணுவ சக்தியாக சீனா மாற வேண்டும் என்று அவர் கூறுயுள்ளார்.
இது ஒரு பெரும்முயற்சி ஆனால் சீனா அந்த இலக்கை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது என்பது அதன் சமீபத்திய செயற்பாடுகளை வைத்து கணிக்க முடிகின்றது.
நவீன ரக ஆயுதங்கள், ஏவுகணைகள், அணு ஆயுதங்கள் என தனது இராணுவ பலத்தை அதிகரித்து வரும் நிலையில், தமது இராணுவத்தை முழுமையாக மறுசீரமைக்கப் போவதாக கூறியுள்ள சீனா இணையப் போர் தொடுக்கும் வல்லமை கொண்ட இராணுவமாக அதனை உருவாக்குவோம் என்று கூறியுள்ளது.
நவீன ஆயுதங்களில் முதலீடு
சீனக்கப்பலின் வருகைக்கு பதிலடி..! இலங்கை வந்தடைந்தது இந்தியாவின் உளவு விமானம் |
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தை உலகின் முதல்தர இராணுவமாக மாற்றுவதே தமது இலக்கு என்றும் சீனா கூறியுள்ளது.
உலகின் மிகப்பெரிய இராணுவமாக சீன இராணுவம் இருந்தாலும் அதன் தாக்குதல் வல்லமையை அதிகரிக்க விரும்பும் சீன அரசாங்கம் படையினரின் எண்ணிக்கையை குறைத்து நவீன ஆயுதங்களில் முதலீட்டை அதிகரிக்க விரும்புகிறது.
கிழக்கு மற்றும் வங்க கடல்களில் தற்போது ஏற்பட்டுள்ள பிராந்திய முரண்பாடுகளையிட்டு தமது கடற்படை மற்றும் வான் படையின் பலத்தையும் சீனா அதிகரிக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும்..பாதுகாப்புக்காக சீனா எவ்வளவு செலவழிக்கிறது என்பதில் "வெளிப்படைத்தன்மை இல்லை", "புள்ளிவிவரங்கள் சீராக இல்லை" என சில சர்வதேச நிபுணர்களால் விமர்சிக்கப்படுகின்றது.
அதன் படைகளுக்கான செலவு என சீனா வெளியிடும் அளவுகளை விட அதன் உண்மையான அளவு அதிகம் என மேற்கத்திய நாடுகள் கணிக்கின்றன.
அமெரிக்கா தவிர்த்த மற்ற எல்லா நாடுகளையும் விட சீனா தற்போது தனது ராணுவத்துக்கு அதிகமாகச் செலவு செய்கிறது என்று பரவலாக நம்பப்படுகிறது.
2030ற்குள் 1,000 அணு ஆயுத ஏவு முனைகள்
சிறிலங்காவிற்குள் நுழையும் அமெரிக்க இராணுவ செயற்கைகோள்..! இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா |
ஆக படை பலத்தில் அமெரிக்காவை விட முன்னிலையில் இருக்கும் சீனா தற்பொழுது ஆயுத அதிகரிப்பிலும் தன்னை பலப்படுத்தி வருகின்றமை வெளிப்படையாகின்றது.
அதிகரிக்கும் அணுஆயுத கையிருப்பு நடப்பு தசாப்தத்தின் இறுதிக்குள் சீனா தனது அணு ஆயுதக் கையிருப்பை நான்கு மடங்காக உயர்த்தும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை கணித்துள்ளது.
சீனா "2030 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 1,000 அணு ஆயுத ஏவுமுனைகளை வைத்திருக்க வாய்ப்புள்ளது" என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதற்க்கு சாட்சியாக உலகளாவிய அணு ஆயுதக் கையிருப்பை வெளியிடும் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்கள், சமீபத்திய ஆண்டுகளில் சீனா தனது அணு ஆயுத எண்ணிக்கையை அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றது.
ஆக எதிர்காலத்தில் புவிசார் அரசியல் போட்டியில் அமெரிக்கவுக்கு சீனா சவாலாக அமையும் என்றும், அதற்கேற்றால் போல் சீனா தனது இலக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது என்றும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேவையில்லாமல் இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம்..! இந்தியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த சீனா |
சீனக்கப்பலின் வருகைக்கு பதிலடி..! இலங்கை வந்தடைந்தது இந்தியாவின் உளவு விமானம் |
சிறிலங்காவிற்குள் நுழையும் அமெரிக்க இராணுவ செயற்கைகோள்..! இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா |
சூடுபிடிக்கும் சீனக்கப்பல் விவகாரம்..! தயார் நிலையில் இந்தியா: ஆதரவாக களமிறங்கும் அமெரிக்கா |