ரணிலின் தற்போதைய நிலை : அறியும் ஆவலில் அமெரிக்கா
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங், அவரது நிலை குறித்து விசாரித்து அறிந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணிலின் மனைவி, மைத்ரி விக்ரமசிங்கவிடம், ரணில் விக்ரமசிங்கவின் நலன்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன்
அதேவேளை, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன், மற்றும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொகமட் நஷீட் ஆகியோரும் மைத்ரி விக்ரமசிங்கவுடன் தொடர்பு கொண்டு ரணில் விக்ரமசிங்கவின் நிலை குறித்து விசாரித்துள்ளனர்.
அதேவேளை இந்தியாவுடன் மிக நெருக்கமாக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் கைது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என, மூத்த இந்திய ஊடகவியலாளர் வெங்கட் நாராயண் தெரிவித்துள்ளார்.
இந்தியா தலையிடாது
இந்தியா இந்த விடயத்தில் தலையிடாது என்றும் ஆனால் ரணில் விக்ரமசிங்கவுக்கு உயர் சிகிச்சை அளிக்க முன்வரக் கூடும் என்றும், சென்னையிலோ அல்லது டெல்லியிலோ உள்ள அப்பலோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க வசதிகளை செய்து கொடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, எதிர்க்கட்சி அரசியல் சக்திகளை அடக்குவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக, கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு, எதிர்க்கட்சி குழு நாளை விளக்கமளிக்கவுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் செயலகத்தில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்திற்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 5 மணி நேரம் முன்
