திணறிய இலங்கைக்கு உதவியளித்த அமெரிக்கா: பைடனுக்கு கோட்டாபய அனுப்பிய செய்தி!
அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடனுக்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த 20 மில்லியன் டொலரை உதவியாக வழங்கவுள்ளதாக அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடன் நேற்று அறிவித்திருந்தார்.
800,000 இற்கு மேற்பட்ட இலங்கை சிறார்களுக்கும், 27,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உணவளிப்பதறம்காக குறித்த நிதியுதவியை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
கோட்டாபயவின் டுவிட்டர் பதிவு
இந்நிலையில், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஜோ பைடனுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
குறித்த டுவிட்டர் பதிவில், "800,000 க்கும் மேற்பட்ட இலங்கை சிறார்களுக்கும், 27,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உணவளிப்பதற்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த நெருக்கடியான நேரத்தில் அமெரிக்கா வழங்கிய உதவிகளுக்கு இலங்கை மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பர்" என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
I thank @POTUS for pledging an additional $20mil to assist #lka to provide nutritious meals to over 800k children & 27k pregnant women & lactating mothers for next 15 months. The people of #SriLanka are grateful for the assistance provided by the #USA in this time of need.
— Gotabaya Rajapaksa (@GotabayaR) June 29, 2022
