ஈரானுடன் உடன்பாட்டுக்கு அமெரிக்கா தயார்! ட்ரம்புக்கு கிடைத்த முக்கிய அறிக்கை
ஈரானில் யார் ஆட்சி நடத்தினாலும் அவர்களுடன் ஒரு உடன்பாடு செய்துகொள்ளத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
தற்போது ஈரானியர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறார்கள், அவர்களுக்குள் கடுமையான உட்கட்சிப் பூசல் நிலவுகிறது எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
புதிய அறிக்கை
“பல சந்தர்ப்பங்களில் ஈரானியர்கள் தலைமைப் பதவிக்காகப் போராடுகிறார்கள் போலும். நாம் இரண்டு அடுக்குத் தலைவர்களை வெளியேற்றிவிட்டதால், அவர்கள் தலைவர் ஆவதற்காகப் போராடவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

அவர்கள் விரும்பும்போது என்னை அழைக்கலாம். எல்லா சாதகங்களும் எங்கள் கையில்தான் உள்ளன.
நாங்கள் எல்லாவற்றையும் வென்றுவிட்டோம். அவர்கள் எங்களுக்கு இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டிய ஒரு அறிக்கையைக் கொடுத்தார்கள்.
மேலும், சுவாரஸ்யமாக, நான் அதை பாகிஸ்தானுக்கான தூதர் பயணத்தை இரத்து செய்த உடனேயே, 10 நிமிடங்களுக்குள் எங்களுக்கு மிகவும் சிறந்த ஒரு புதிய அறிக்கை கிடைத்தது.
அவர்களிடம் அணு ஆயுதம் இருக்காது என்பது பற்றி நாங்கள் பேசினோம், மிகவும் எளிமையாக.அவர்கள் நிறைய வாக்குறுதிகளை அளித்தார்கள். ஆனால் அது போதுமானதாக இல்லை” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்