அமெரிக்காவை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொலை சம்பவம் - காவல்துறையின் அராஜகம்!
அமெரிக்காவில் கைது நடவடிக்கையின்போது கருப்பின வாலிபர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த கருப்பினத்தவர் கீனன் ஆண்டர்சன் என்பவரை சாலை விபத்து தொடர்பான முறைப்பாட்டில் காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர்.
அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காவல்துறை அதிகாரி அவரை தரையில் தள்ளி விழுத்தியதோடு, கழுத்தில் கை முட்டியை வைத்து அழுத்தியுள்ளார்.
உதவிகோரி அலறிய நபர்
அப்போது ஆண்டர்சன், "உதவி, உதவி, என்னை ஜார்ஜ் பிளாய்ட் போல கொலை செய்ய பார்க்கிறார்கள்" என அலறியுள்ளார். அப்போது அருகில் இருந்த மற்றொரு காவல்துறை அதிகாரி ஆண்டர்சன் மீது மின்சாரத்தை பாய்ச்சும் துப்பாக்கியை 30 வினாடிகள் தொடர்ந்து பயன்படுத்தியுள்ளார்.
இதில் சுயநினைவை இழந்த அவர் அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேவேளை கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கைது நடவடிக்கையின் போது ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதை அடுத்து ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் மாபெரும் போராட்டம் வெடித்தது.
காவல்துறையின் அத்துமீறிய செயற்பாடு
இனவெறிக்கு எதிரான 'பிளாஸ் லைவ்ஸ் மேட்டர்' என்கிற தன்னார்வ அமைப்பு இந்த போராட்டங்களை முன்னெடுத்தது. இந்த நிலையில் ஜார்ஜ் பிளாய்ட்டுக்கு நேர்ந்தது போலவே மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதேவேளை உயிரிழந்த ஆண்டர்சன் கருப்பினத்தை சேர்ந்த 'பிளாஸ் லைவ்ஸ் மேட்டர்' அமைப்பின் இணை நிறுவனரான பாட்ரிஸ் கல்லர்சின் ஒன்றுவிட்ட சகோதரர் என்றும் கூறப்படுகின்றது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
