இஸ்ரேலின் பலத்தை அதிகரித்த அமெரிக்கா: நிலைநிறுத்தப்பட்ட ஏவுகணை அமைப்பு

Dilakshan
in மத்திய கிழக்குReport this article
ஈரானின் (Iran) ஒக்டோபர் 01 தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் (Israel) ஒரு தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில், அமெரிக்கா (US) THAAD என்ற ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அந்நாட்டு வழங்கியுள்ளது.
குறித்த ஏவுகணை அமைப்பானது, தயார் நிலையில், உள்ளதாகவும் தேவைப்படும் போது அதனை பயன்படுத்த ஆயத்தமாக இருப்பதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் அஸ்டின் (Lloyd Austin) இன்று தெரிவித்துள்ளார்.
ஏவுகணை எதிர்ப்பு ஆயுதம்
THAAD பாதுகாப்பு அமைப்பு அமெரிக்க இராணுவத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களில் ஒன்றாகும்.
இது 150 முதல் 200 கிலோமீட்டர் (93 முதல் 124 மைல்கள்) வரம்பில் உள்ள பலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டது மற்றும் சோதனையில் கிட்டத்தட்ட சரியான வெற்றி விகிதத்துடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இதன் மூலம், குறுகிய, நடுத்தர மற்றும் இடைநிலை-தடுப்பு ஏவுகணைகளை உள்ளேயும் அல்லது வெளியேயும் ஈடுபடுத்தி அழிக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.
அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள்
எவ்வாறாயினும், கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஈரான் மீதான தாக்குதலுக்கான இஸ்ரேலின் தயாரிப்புகள் சிலவற்றை விவரிக்கும் இரண்டு உயர் இரகசிய அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் டெலிகிராமில் கசிந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அவற்றில், ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை தயார்ப்படுத்தி வருவது குறித்த விவரங்கள் குறித்தும் தகவல்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
