தனியார் காணியிலிருந்து மீட்கப்பட்ட பெரும் தொகையான அபாயகரப் பொருட்கள்!
police
kilinochchi
court
explosives
excavation
By Kalaimathy
கிளிநொச்சியில் தனியார் காணி ஒன்றில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட காவல்துறை பிரிவிற்குட்பட்ட அம்பாள் நகர் பகுதியில் நபர் ஒருவர் தனது காணியை சுத்தம் செய்யும் வேளை சந்தேகத்திற்கிடமான பொருட்களை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறை மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அப்பகுதிக்கு சென்ற கிளிநொச்சி காவல்துறை வெடிபொருட்கள் இருப்பதை உறுதிபடுத்தினார்கள்.
இதையடுத்து கிள்நொச்சி மாவட்ட நீதிமன்ற அனுமதியை பெற்று குறித்த பகுதியில் நேற்றைய தினம் அகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் பெருந்தொகையான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி