நீதித்துறையில் அநுர அரசின் தலையீடு : சபையில் தயாசிறி குற்றச்சாட்டு

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Dayasiri Jayasekara NPP Government
By Sathangani Sep 25, 2025 06:08 AM GMT
Report

கடந்த காலங்களை விட, இந்த அரசாங்கம் நீதித்துறையில் அதிக தலையீடுகளை மேற்கொள்வதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) குற்றம் சாட்டியுள்ளார்.

இதன்படி, தமக்கு ஏற்றவாறு நீதிபதி ஆயங்களை நியமித்து வழக்குகளை விசாரிக்கும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”அரசியலமைப்புக்கமைய, நீதிபதி அல்லது நீதியரசர் ஒருவரை வேறெந்த வேதனம் பெறும் பணிகளுக்கு அமர்த்த முடியாது. நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை பாதுகாப்பதற்கு இத்தகைய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேல் மாகாண தனியார் போக்குவரத்தில் கடுமையாகும் கட்டுப்பாடு

மேல் மாகாண தனியார் போக்குவரத்தில் கடுமையாகும் கட்டுப்பாடு

தகவலறியும் உரிமைச் சட்டம்

எனினும், ஓய்வுபெற்ற நீதியரசர் அல்லது நீதிபதியொருவரை அரச பதவிகளுக்கு நியமிக்கும்போது, நீதித்துறை சேவையின் சுயாதீனத் தன்மை குறித்து கேள்விகள் எழுகின்றன.

நீதித்துறையில் அநுர அரசின் தலையீடு : சபையில் தயாசிறி குற்றச்சாட்டு | Anura Govt Interference In The Judiciary Dayasiri

முன்னாள் பிரதம நீதியரசர் ஒருவர் தற்போது, ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர விதிவிடப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், அவரது நியமன கடிதம் குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கேள்வி எழுப்பியபோது, அவ்வாறான எந்த கடிதமும் இல்லை என பதிலளிக்கப்பட்டது.

முன்னதாக சுயாதீனமாக இருந்த நீதிச் சேவை அதிகாரிகள் சங்கம், காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னர் இந்த அரசாங்கத்தின் அரசியல் கட்சியுடன் இணைந்தது. தற்போது, இந்த சங்கத்தின் முன்னாள் தலைவர் வடமத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது, பல நீதிபதிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்படுகின்றனர். அவ்வாறே மிகவும் சிரேஷ்ட நீதிவானாக இருந்த சதுரிக்கா டி சில்வா கல்கிசை நீதிவானாக நியமிக்கப்பட்டு ஓராண்டு கூட பூர்த்தியாகாத நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டார்.

மகிந்தவை வீடு தேடிச் சென்று சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்

மகிந்தவை வீடு தேடிச் சென்று சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்

கைது செய்யுமாறு உத்தரவு

அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்டோரை கைது செய்யுமாறு உத்தரவிட்ட பின்னணயில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். ராஜித சேனாரத்ன முன்பிணை கோரிய மனு நிராகரிக்கப்பட்டது, நீதவான் இருக்கும்போதே, மேலதிக நீதிவானிடம் சென்று கையூட்டல் ஆணைக்குழு பிடியாணை பெற்று, விடுமுறை நாளில் அவரை கைதுசெய்தது.

நீதித்துறையில் அநுர அரசின் தலையீடு : சபையில் தயாசிறி குற்றச்சாட்டு | Anura Govt Interference In The Judiciary Dayasiri

அரசாங்கத்துடன் தொடர்புடைய நீதிச் சேவை அதிகாரிகளின் குழுக்களே திட்டமிட்டு இத்தகைய செயற்பாடுகளை புரிகின்றன.

இதன்காரணமாக, வெளியக நீதியை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பிரதம நீதியரசர் இந்த விடயத்தில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

பலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்கின்றோம்! சர்வதேச அரங்கில் அநுர உறுதி

பலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்கின்றோம்! சர்வதேச அரங்கில் அநுர உறுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025