சர்வதேசத்திடம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விசேட வேண்டுகோள்

United Nations Sri Lanka Northern Province of Sri Lanka
By Shalini Balachandran Oct 01, 2024 08:37 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

சிறிலங்கா இராணுவத்தை பொறுப்புக் கூறவைக்கும் வகையில் பொருத்தமான சர்வதேச நீதி பொறிமுறையை (ICC ) பிரயோகித்து தமக்கான நீதியை பெற்றுத்தருமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறித்த விடயத்தை இது தொடர்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,  ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு முன்வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக குறித்த கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இன்று சர்வதேச சிறுவர்கள் தினமாகும் உலகெங்கும் வாழும் சிறுவர்களிடையே புரிந்துணர்வையும் பொதுநிலைப்பாட்டையைம் ஏற்படுத்தும் நோக்கிலேயே 1954 ஆம் ஆண்டு UNICEF அமைப்பால் சிறுவர்தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

யாழில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளின் நினைவரங்கம்

யாழில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளின் நினைவரங்கம்

மனித உரிமை

அத்தினத்தில் சிறுவர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சிகள் நடாத்தியும் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி அவர்களை மகிழ்வித்தும் இந்நாள் சர்வதேசத்தால் கொண்டாடப்படுகிறது இன்று சிறுவர்தினம் மட்டுமல்ல முதியோர் தினமும் இன்றாகும்.

முதியவர்களும் அன்றைய தினம் அவர்களின் கடந்த கால சேவைக்காகவும் அவர்களின் ஆற்றல் அனுபவம் என்பவற்றிற்காகவும் கௌரவப்படுத்தப்படுவதோடு மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக பல நிகழ்வுகள் நடாத்தப்படுகின்றன. 

சர்வதேசத்திடம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விசேட வேண்டுகோள் | Appeal To The Un Human Rights Commissioner

ஆனால் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற சிறுவர்களதும் முதியவர்களதும் நிலை எப்படி உள்ளது என்பதை unicef போன்ற UN அமைப்புக்கள் உள்ளிட்ட அமைப்புக்கள் சிந்திக்கின்றனவா ?

இறுதி யுத்த நேரத்தில் பாலுக்கும் கஞ்சிக்கும் வரிசையில் நின்ற எத்தனை சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் எறிகணைகளாலும் கொத்துக்குண்டுகளினாலும் உடல் சிதறி பலியானார்கள் ? எத்தனை பேர் ஊனமுற்று நடைப்பிணமாகி சிறிது சிறிதாக இறக்கிறார்கள் என்பது புரியுமா ? இதுமட்டுமா, குடும்பத்தலைவன் சரணடையும் போது அவர்களின் பாதுகாப்பிற்காகவே சேர்ந்து சரணடைந்த மனைவிமார் தங்கள் பிள்ளைகளுடனேயே சரணடைந்தார்கள்.

ஐந்து சிறுமிகள் வன்கொடுமை : தாத்தா கைது

ஐந்து சிறுமிகள் வன்கொடுமை : தாத்தா கைது

சரணடைந்த கைக்குழந்தைகள் 

அப்படி சரணடைந்த கைக்குழந்தைகள் உள்ளிட்ட 29 சிறுவர்களின் விபரங்களை கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுவர் தினத்தன்று வெளியிட்டிருந்தோம்.

இந்த விபரங்கள் பன்னாட்டு தூதுவர்களுக்கும் கையளிக்கப்பட்டு வருகின்றது ஆனால் இதுவரை எவரும் இக் குழந்தைகள் தொடர்பில் அக்கறை எடுத்ததாக எமக்கு தெரியவில்லை.

சர்வதேசத்திடம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விசேட வேண்டுகோள் | Appeal To The Un Human Rights Commissioner

இந்தப் பிள்ளைகளுக்கும் இந்த பிள்ளைகள் உள்ளிட்ட அனைத்து வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வயோதிபப் பெற்றோருக்கும் இன்றைய தினம் மகிழ்ச்சியை யாரால் கொடுக்கமுடியும் ? இவர்களிற்கு நிம்மதி என்பதே இல்லாமல் போய் 15 வருடங்களாகி விட்டன.

நிம்மதி இல்லாமலேயே 250 இற்கு மேற்பட்ட பெற்றோர்கள் இறந்துவிட்டனர் ஏன் எவராலும் இறந்து கொண்டிருக்கும் எமக்கு எமது பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்பதைச் சொல்லமுடியவில்லை ? அனைத்து உள்ளூர் பொறிமுறையிலும் நம்பிக்கை இழந்த நாங்கள் சர்வதேச நீதியில் மட்டுமே நம்பிக்கை கொண்டு சர்வதேசத்தையே எதிர்பார்த்து நிற்கிறோம்.

அநுரவுடன் இணைந்து பணியாற்ற தயாராகும் இந்தியா : தமிழ்கட்சிகளிடம் தூதுவர் தெரிவித்த விடயம்

அநுரவுடன் இணைந்து பணியாற்ற தயாராகும் இந்தியா : தமிழ்கட்சிகளிடம் தூதுவர் தெரிவித்த விடயம்

சர்வதேச நீதி 

எமது உறவுகள் சரணடைந்த பிரதான இராணுவ காவலரண்களிற்கு பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றில் விசாரித்தால் அவர்கள் எமது பிள்ளைகளை எங்கு எவரிடம் ஒப்படைத்தார்கள் ? அல்லது அவர்களை என்ன செய்தார்கள் என்பதை அறிய முடியும்.

சர்வதேச நாடுகளும் ஐ.நா சபையும் இணைத்து இதை செய்வார்களா ? அப்பொழுதுதான் எமக்காவது இறப்பதற்குமுன் பிள்ளைகளின் நிலை தெரியவரும். செய்வார்களா? 

சர்வதேசத்திடம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விசேட வேண்டுகோள் | Appeal To The Un Human Rights Commissioner

ஆணையாளர் அவர்களே !, கடந்த 2022 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட46/1 தீர்மானத்தின் பிரிவு 8 இன்படி ஐ.நா ஆல் ஆவணம் திரட்டுவதற்காக உருவாக்கப்பட்ட ஐ.நா வின் அமைப்பானது போதியளவு ஆவணங்களைத் திரட்டியுள்ளது.

பல்வேறு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள எமது உறவுகளில் அநேகர் தமது சாட்சியங்களை விரும்பி பதிவு செய்தனர் அவர்கள் (SLAP) தமது அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளனர் அந்த அறிக்கையும் சர்வதேச நீதி பொறி முறையையே பரிந்துரை செய்துள்ளனர்.

இஸ்ரேல் தொடருந்து நிலையத்தில் ஆயுததாரிகள் துப்பாக்கிசூடு : பலர் பலி

இஸ்ரேல் தொடருந்து நிலையத்தில் ஆயுததாரிகள் துப்பாக்கிசூடு : பலர் பலி

பல்வேறு அறிக்கை

அத்துடன் ஐ.நா ஆல் அறிக்கை இடப்பட்ட ருஸ்மான் அறிக்கை உள்ளன பல்வேறு அறிக்கைகளும் போதியளவு ஆதாரங்களை முன்வந்துள்ளன ஆகவே திரட்டப்பட்ட ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டே இலங்கையை சர்வதேச நீதிப்பொறிமுறைக்குள் உட்படுத்த போதுமானது. 

அத்துடன் முன்னாள் ஐ.நா ஆணையாளர் மிசேல் பசேலெட் (Michelle Bachlet) அம்மையார் அவர்கள் பெப் 2021 அறிக்கையில் சிறிலங்கா விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) பாரப்படுத்தும் பரிந்துரையை வழங்கி இருந்தார்.

சர்வதேசத்திடம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விசேட வேண்டுகோள் | Appeal To The Un Human Rights Commissioner

அந்த பரிந்துரையை ஐ.நாவின் 26 முன்னாள் ஆணையாளர்களும் வழிமொழிந்திருந்தனர் எனவே மீண்டும் புதிய தீர்மானங்களைக் கொண்டு வருவதிலும், பின் அவற்றிற்கென கால நீடிப்புகளை வழங்குவதிலும் கால விரயங்களைச் செய்யாது சிறிலங்காவை பொறுப்புக் கூறவைக்கும் வகையில் பொருத்தமான சர்வதேச நீதி பொறிமுறையை (ICC ) பிரயோகித்து எங்களுக்கான நீதியை நாம் உயிருடன் இருக்கும் போதே பெற்றுத்தாருங்கள். 

எமது உயிரிலும் மேலான உறவுகளை பறிகொடுத்துவிட்டு வயதான காலத்திலும் நீதி கேட்டுப்போராடும் நாம், சர்வதேச நீதி பொறிமுறை தவிர்ந்த எந்த சமரசத்தையும் ஏற்றுகொள்ளமாட்டோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி கொல்லப்பட்டார் ஹிஸ்புல்லா தலைவர்..!

எப்படி கொல்லப்பட்டார் ஹிஸ்புல்லா தலைவர்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, Chigwell, United Kingdom

26 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், மல்லாவி

01 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், நீர்கொழும்பு, London, United Kingdom

04 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

06 Feb, 1996
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, உயரப்புலம்

30 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
நன்றி நவிலல்

சுன்னாகம், London, United Kingdom

05 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில், New Malden, United Kingdom

04 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

01 Feb, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, பரிஸ், France

12 Feb, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை தெற்கு, பிரான்ஸ், France

25 Jan, 2026
மரண அறிவித்தல்

துணுக்காய், யாழ்ப்பாணம், Toronto, Canada

27 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
31ம் ஆண்டு நினைவஞ்சலி

வத்திராயன் வடக்கு வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Toronto, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Zürich, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Basel, Switzerland

25 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018