இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
கல்வி ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
உலக தரவரிசை குறியீடுகளில் இலங்கை பல்கலைக்கழகங்களை முதலிடத்திற்கு உயர்த்துவதையும், சர்வதேசமயமாக்கலுக்காக வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் உயர் கல்வி ஒத்துழைப்பை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு பின்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற முறையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்தது.
5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்
பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் சீன மக்கள் குடியரசின் சீன அறிவியல் அக்கடமியின் புவியியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

களனி பல்கலைக்கழகத்திற்கும் இந்தியாவின் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கும் ஜப்பானின் யோகோகாமா தேசிய பல்கலைக்கழகத்தின் பல்துறை அறிவியல் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கும் ஜப்பானின் டோகுயாமா கல்லூரியின் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் 05 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்