ஆர்மேனியாவில் வெடிவிபத்து: வெளியான காணொளிகள்
புதிய இணைப்பு
ஆர்மேனியா தலைநகரான யெரெவனில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருபதிற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், காயமடைந்தவர்கள் அவசர சூழ்நிலையில் உள்ளதாக அந்நாட்டு அமைச்சரகம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
ஆர்மேனியா தலைநகரான யெரெவனில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் அவசரகால அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த வெடிவிபத்தானது யெரெவனில் உள்ள சுர்மாலு வணிக வளாக மையத்தில் இன்று(14) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிவிபத்தால் வணிக வளாகத்தை சூழவுள்ள பகுதிகளில் பெரும் புகைமண்டலம் சூழ்ந்துள்ளதுடன் அங்குள்ள நிலைமையை கட்டுப்படுத்த அந்த இடத்தில் 10 தீயணைப்பு வாகனங்கள் இருந்ததாகவும், மேலும் 10 தீயணைப்பு வாகனங்கள் சென்று கொண்டிருந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விபத்திற்கான காரணம்
மேலும், வணிக வளாகத்தில் ஏற்பட்ட இந்த பயங்கர வெடி விபத்திற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், ஆர்மேனியா நாட்டு மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும், இந்த வெடி விபத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
An #explosion occurred in the "#Surmalu" shopping center in #Yerevan, the Armenian Ministry of #Emergency Situations reports.
— Chaudhary Parvez (@ChaudharyParvez) August 14, 2022
Many people were transferred to different hospitals. The number of victims may increase.#Armenia pic.twitter.com/pBSerEUKOo
More Video- An #explosion occurred in the "#Surmalu" shopping center in #Yerevan, the Armenian Ministry of #Emergency Situations reports.
— Chaudhary Parvez (@ChaudharyParvez) August 14, 2022
Many people were transferred to different hospitals. The number of victims may increase. #Armenia pic.twitter.com/mfnmFxMme0
