வயல் வெளியில் விழுந்தது இராணுவ விமானம் -விமானிகள் பலி
பிலிப்பைன்ஸில் இராணுவ விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தவேளை கட்டுப்பாட்டை இழந்து வயலில் விழுந்து நொறுங்கியதில் இரண்டு விமானிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
பிலிப்பைன்ஸில் விமானப்படைக்கு சொந்தமான 'மார்செட்டி எஸ்.எப். 260' ரக விமானம், அந்த நாட்டின் படான் மாகாணத்தில் உள்ள பிலார் நகரில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.
திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம்
விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்தனர். இந்த விமானம் பிலார் நகருக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்தது.
அதைத்தொடர்ந்து அங்குள்ள வயல்வெளியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்துக்கான காரணம்
விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பில் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் இராணுவம் தெரிவித்துள்ளது.