அதிரடியாக கைது செய்யப்பட்ட பீரங்கிப் படை ராணுவ வீரர்!!
விமான எதிர்ப்பு தோட்டாக்கள் பலவற்றை வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் வீட்டில் 9 விமான எதிர்ப்பு தோட்டாக்களும் 84S வகை தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, கம்பஹா - திவுலபிட்டிய பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரே நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
அந்த வீரரின் வீட்டில் விமான எதிர்ப்பு தோட்டாக்கள் இருப்பதாக காவல்துறையினருக்க கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபர் பீரங்கி படையில் இணைக்கப்பட்டவர் என்றும், கந்தளாய் சர்க்கரை தொழிற்சாலையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, குறித்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
