படுகொலைகளின் எதிரொலி: இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு பேரிடி!
ஆயுதப் பயிற்சி பெற்ற பின்னர் சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறும் பல நபர்கள் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்தா குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அத்தகைய நபர்களை கைது செய்வதற்காக அண்மையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார்.
கைது நடவடிக்கை
இந்த நிலையில், ஆயுதப் பயிற்சி பெற்று இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை மிகக் குறுகிய காலத்தில் கைது செய்யும் திறன் இராணுவத்திற்கும் காவல்துறைக்கும் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ஊடகவியலாளர்களின் கேள்வியொன்றுக்கு பதில் அளித்த பாதுகாப்பு செயலாளர், கடமையில் இருக்கும் இராணுவ வீரர்கள் சிலரும் பொருளாதார நெருக்கடி மற்றும் போதைப்பொருள் பழக்கம் காரணமாக வீரர்கள் குற்றவாளிகளுடன் தொடர்பில் ஈடுபடுவதாக தகவல்கள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் காலத்தில் அந்த வீரர்களை அடையாளம் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்தா மேலும் தெரிவித்துள்ளார்.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
