ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் - அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா இலங்கை ஏ அணி..
வளர்ந்துவரும் இளையோருக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணியும் இலங்கை ஏ அணியும் போட்டியிட்டன.
இதில் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை ஏ அணி தோல்வியடைந்துள்ளது.
கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை ஏ அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதற்கமைய ஆப்கானிஸ்தான் ஏ அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 252 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 38.5 ஓவர்களில் 241 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைச் சந்தித்தது.
பந்துவீச்சில் மொஹமட் இப்ராஹிம் 4 விக்கெட்டுகளையும், மொஹமட் சலீம் மற்றும் ரஹ்மான் அக்பர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அரையிறுதிக்கு தகுதி

இலங்கை அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வியடைந்த காரணத்தினால், அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும்.
இதேவேளை, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றால், ஓட்ட சராசரியின் அடிப்படையில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.