ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி - சற்றுமுன் ஆரம்பம்
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இந்த போட்டி பாகிஸ்தானின் முதல்தானில் இன்று மதியம் 3 மணியளவில் ஆரம்பமாகியது.
இதில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் மோதிக்கொண்டிருக்கின்றது.
பாகிஸ்தான் முள்தானில் இடம்பெற்று வரும் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுபெடுத்து ஆட தீர்மானித்தது.

அணிகள்
பாகிஸ்தான்: துடுப்பாட்ட வீரர்கள் - பாபர் அஸாம் (தலைவர்), அபுதுல்லா ஷபிக், பக்கார் ஸமான், இப்திகார் அஹ்மத், இமாம் உல் ஹக், மொஹமத் ஹரிஸ், மொஹமத் ரிஸ்வான், சவ்த் ஷக்கீல். சகலதுறை வீரர்கள் - ஷதாப் கான் (உதவித் தலைவர்), அகா சல்மான், பாஹீம் அஷ்ரப், மொஹமத் நவாஸ், மொஹமத் வசிம்.
பந்துவீச்சாளர்கள் - ஹரிஸ் ரவூப், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்றிடி, உசாமா மிர்.
நேபாளம்: துடுப்பாட்ட வீரர்கள் - ஆரிப் ஷெய்க், ஆசிப் ஷெய்க், திபேந்த்ரா சிங் ஐரீ, குஷால் பூர்டெல், அர்ஜுன் சாத், பிம் ஷர்க்கி. சகலதுறை வீரர்கள் - ரோஹித் பவ்டெல் (தலைவர்), கரன் கே.சி., குஷால் மல்லா, ப்ராட்டிஸ் ஜி.சி., சோம்பால் கமி.
பந்துவீச்சாளர்கள் - குல்சான் ஜா, சந்தீப் லமிச்சான், லலித் ராஜபான்ஷி, மௌசம் தகால், சந்தீப் ஜோரா, கிஷோர் மஹோட்டோ.