புதிய காவல்துறை ஊடகப் பேச்சாளர் நியமனம்
புதிய காவல்துறை ஊடகப் பேச்சாளராக உதவி காவல்துறை அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் (F.U. Wootler) நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் முன்னர் காவல்துறை ஊடகப் பிரிவின் உதவி பணிப்பாளராகப் பணியாற்றினார்.
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மற்றும் காவல்துறை ஊடக பேச்சாளராக கடமையாற்றிய புத்திக மனதுங்க (Buddhika Manatunga), பொலன்னறுவை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதுகலைப் பட்டம்
எப். யூ. வுட்லர் அவர்கள் குருனாகலை சாந்த ஆனா வித்தியாலயத்தின் புகழ்பெற்ற பழைய மாணவராவார்.
இங்கிலாந்திலுள்ள பகின்க்ஹெம்சயர் (BUCKINGHAMSHIRE) பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தை பெற்றக்கொண்ட அவர் இலங்கை காவல்துறையில் கடமையாற்றும் போது 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 02 ஆந் திகதி கொழும்பு பல்கலைக் கழகத்தில் மனித உரிமைகள் தொடர்பான முதுகலைப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

செம்மணியில் இருந்து ஐ.நா ஆணையாளரை திருப்பி அனுப்ப திட்டமிட்ட அரசு: முகத்திரையை கிழித்த அர்ச்சுனா எம்.பி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


