முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன (Lakshman Yapa Abeywardena) மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க (Jayantha Edirisinghe) ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று (30) குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளில், இரு நபர்களும் அரசாங்கத்திற்கு 1.7 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
விளம்பரங்கள் பிரசுரித்ததன் மூலம்
2014 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) பதவியேற்ற பின் இரண்டாம் ஆண்டு விழாவிற்காக இலங்கை முதலீட்டு சபையின் நிதியைப் பயன்படுத்தி செய்தித்தாள்களில் விளம்பரங்கள் பிரசுரித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1.7 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த இருவருக்கும் எதிராக இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகைகள் முறையாக சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து, பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செம்மணியில் இருந்து ஐ.நா ஆணையாளரை திருப்பி அனுப்ப திட்டமிட்ட அரசு: முகத்திரையை கிழித்த அர்ச்சுனா எம்.பி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
