ஆர்சிபி வெற்றி பேரணியில் நேர்ந்த கொடூரம்: பெங்களூர் அணியின் முக்கிய அதிகாரி கைது
புதிய இணைப்பு
ஐபிஎல் (IPL) வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சன நெரிசல் தொடர்பில், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அணியின், சந்தைப்படுத்தல் மற்றும் வருமானத்துறை தலைவரையே காவல்துறையினர் இன்று (06.06.2026) கைது செய்துள்ளனர்.
சின்னசாமி மைதானம் (M.Chinnaswamy Stadium) அருகே ஏற்பட்ட சன நெரிசல் தொடர்பாக, ஏற்கனவே பெங்களூரு காவல்துறையினரால் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சின்னசாமி மைதானத்திற்கு வெளியே லட்சக்கணக்கான ரசிகர்கள், பிரமாண்டமான கொண்டாட்டத்திற்காக கூடியிருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பதினொரு பேர் கொல்லப்பட்டனர். பலர் காயங்களுக்கு உள்ளாகினர்
முதலாம் இணைப்பு
ஆர்சிபி வெற்றிப் பேரணிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் இன்று (04) சின்னசுவாமி மைதானத்தில் (M Chinnaswamy Stadium) இடம்பெற்றுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பை வென்ற நிலையில், வெற்றியைக் கொண்டாடுவதற்காகப் பேரணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதிக நெரிசல்
இந்தநிலையில், அதிக நெரிசல் ஏற்பட்டிருப்பதால், பேரணி நடைபெறும் பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வெற்றியை கொண்டாட கூட்டத்தில் கலந்து கொண்ட 20 பேருக்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெற்றியைக் கொண்டாடுவதற்கு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சி சோகத்தில் முடிந்திருப்பது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் மக்களிடையே பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
