ஆளும் கட்சியின் கோழைத்தனமான செயல்! ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகம் தாக்கப்பட்டமை தொடர்பில் வெளியான கண்டன அறிக்கை

Colombo Attack SJB Ranjith Madduma Bandara Kotte Opposition Leader Office
By Chanakyan Mar 07, 2022 12:05 PM GMT
Report

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்திற்கு திட்டமிடப்பட்ட ஒரு குண்டர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட இழிவான செயலானது நாட்டின் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை என கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்திற்கு முன்பாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் வந்த ஆதவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் முட்டை வீசி தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர்.

இதனைக் கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அந்த அறிக்கையில், 

நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கத் தவறியதால் மக்கள் மத்தியில் அதிருப்திக்குள்ளாகியுள்ள அரசாங்கம், மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான எதிர்க்கட்சியின் தலைமையகம் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலில் மக்களின் கருத்தை நசுக்குவது வருந்தத்தக்க தவறு என்பதை அரசாங்கத்திற்குச் சொல்கிறோம்.

எரிபொருள் நெருக்கடி, எரிவாயு நெருக்கடி, மருந்து தட்டுப்பாடு, அத்தியாவசிய உணவு மற்றும் பானங்களுக்கான பற்றாக்குறை, விலை உயர்வு, போக்குவரத்து சேவை செயலிழப்பினால் நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லாத அராஜக ஆட்சி உருவாகும் இந்நேரத்தில், இத்தகைய கேவலமான செயல்களில் இருந்து அவர்களின் இயலாமையை மறைக்கை முயல்வது தீக்கோழியின் தலையை மணலில் மறைப்பது போன்ற செயலாகும்.

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் அபிப்பிராயத்திற்கு அரசாங்கம் அடக்குமுறையையே தீர்வாகத் தேர்ந்தெடுத்திருந்தால், அதற்கெதிராக மக்களுடன் இணைந்து செயற்பட ஐக்கிய மக்கள் சக்தி ஒரு போதும் தயங்காது என்பதை இங்கு சுட்டிக்காட்டுகிறோம்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகம் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டர்கள் தாக்குதல் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி இதற்குக் காரணமானவர்கள், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று காவல்துறை உட்பட பொறுப்பு வாய்ந்த தரப்பினரிடம் வலியுறுத்தி கூறிக் கொள்கிறோம்.

ஒரே நாடு ஒரே சட்டத்தை யதார்த்தமாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முன் நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இதுபோன்ற கோழைத்தனமான செயல்களால் ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சார்ந்த வேலைத்திட்டங்களை நிறுத்த முடியாது என்பதை குண்டர்கள் குழுக்களுக்கு நாங்கள் கூறிக்கொள்கிறோம்.

இன்று மக்களை வாட்டி வதைக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் பதில் இல்லை என்பதையே இவ்வாறான சம்பவங்களில் இருந்து தெளிவாகின்றது.

மக்கள் மீதான அடக்குமுறை, ஊடக அடக்குமுறை, சமூக ஊடக அடக்குமுறை, தொழிற்சங்கங்கள் மீதான அடக்குமுறை, ஆர்ப்பாட்டங்களை முடக்குவதற்கான அடக்குமுறைகளிலிருந்து ஜனநாயக அரசியல் கட்சிகளின் அடக்குமுறைக்கு அரசாங்கம் தமது இலக்குகளை மாற்றுவதன் ஊடாக வரப்போகும் ஆபத்திற்கு எதிராக மக்களைத் ஒன்று திரட்டும் போராட்டம் மிக வேகமாக முன்னெடுக்கப்படும் என்பதை வலியுறுத்தி கூறிக் கொள்கிறோம்.

இதற்காக அனைத்து மக்கள் சார்ந்த அமைப்புகளையும் எம்முடன் இனைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம் என அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, Toronto, Canada

15 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021