தென்னிலங்கையில் இராணுவத்தின் மூர்க்கத்தனமான தாக்குதல்! ரணிலுக்கு அறிவுறுத்திய அமெரிக்கா
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்
இலங்கையின் பாதுகாப்பு படையினரின் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் குறித்து அச்சமடைந்துள்ளதாக அமெரிக்க செனட்டின் வெளி உறவு குழு தெரிவித்துள்ளது.
டுவிட்டர் பதிவொன்றையிட்டு அமெரிக்க செனட்டின் வெளி உறவு குழு இதனை தெரிவித்துள்ளது.
மேலும், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இலங்கை மக்களின் ஜனநாயக அபிலாசைகளுடன் ஈடுபாட்டை காட்டுமாறும் பொருளாதார ஸ்திரதன்மை மற்றும் பரந்துபட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பாடுபடுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
Horrified by Sri Lankan security forces' violent crackdown on protesters last night. I encourage President @RW_UNP to engage with the Sri Lankan people's democratic aspirations, work toward economic stability & address widespread need. Human rights must be protected above all. https://t.co/bXmtFPfYFi
— Senate Foreign Relations Committee (@SFRCdems) July 22, 2022
எல்லாவற்றிற்கும் மேலாக மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் குறித்த பதிவில் சுட்டிக்காட்டப்படுள்ளது.
நேற்று காலி முகத்திடலில் போராட்டகாரர்கள் மீது இடம் பெற்ற தாக்குதல் தொடர்பிலேயே அமெரிக்க செனட்டின் வெளிஉறவு குழு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.