அமெரிக்காவை திருப்பி அடித்த ஈரான் : தாக்குதலுக்கு உள்ளாகும் இராணுவ தளம்
புதிய இணைப்பு
சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக ஈரானின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்த சில மணிநேரங்களுக்கு பின்னர் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஈரான் (Iran) நாட்டின் அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா (United States) நேற்று தான் தாக்குதல் மேற்கொண்ட நிலையில், இன்று (23.06.2025) மீண்டும் ஃபோர்டோவில் உள்ள ஈரானின் நிலத்தடி யுரேனிய செறிவூட்டல் நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் (Israel) - ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாகவே மோதல் தொடர்ந்தது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டன.
இஸ்ரேல் தாக்குதல்
ஆனால், நேற்று (22.06.2025) அமெரிக்கா இந்த மோதலில் உள்ளே வந்தது. இஸ்ரேலின் மூன்று அணு ஆலைகள் மீது அமெரிக்கா மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. இது உலக அளவில் பாரிய அதிவலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மீண்டும் ஈரானின் ஃபோர்டோவ் அணு உலை மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல்களை ஈரான் அரசு ஊடகம் செய்தியாக வெளியிட்டுள்ளதுடன், அமெரிக்காவின் ஆதரவு முழுமையாக இருப்பதால் ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
மேலும், ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தீவிரமான தாக்குதலை நடத்தியுள்ளது.
அமெரிக்க விமானப்படை GBU-57 "பங்கர் பஸ்டர்" வெடிகுண்டுகள் மற்றும் டோமஹாக் ஏவுகணைகள் மூலம் ஃபோர்டோவ் அணு உலை, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள அணு ஆலைகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை தாக்கின.
ஃபோர்டோவ் அணு உலை
இந்த தாக்குதல் நடந்து ஒரு நாள் கூட நிறைவடையாத நிலையில், இஸ்ரேல் மீண்டும் இந்த தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
ஃபோர்டோவ் அணு உலைக்கு யுரேனியத்தை விரைவாகச் செறிவூட்டும் திறன் இருக்கிறது. இந்த ஃபோர்டோவ் அணு உலை பூமிக்கு அடியில் 80 முதல் 90 மீட்டர் கீழே அமைந்துள்ளது.
இந்த ஆலையை அழிக்கத் தேவையான வெடிமருந்துகள் இஸ்ரேலிடம் இல்லை. இந்தளவுக்கு ஆழத்திற்குச் சென்று வெடிக்கும் திறன் கொண்ட குண்டு அமெரிக்காவிடம் மட்டுமே இருந்தது.
இதன் காரணமாகவே அமெரிக்கா நேற்று இங்குத் தாக்குதலை நடத்தியது. அதேநேரம் அமெரிக்காவின் இந்த "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறித்து இன்னும் துல்லியமான தகவல்கள் வெளியாக வில்லை.
இருப்பினும், ஃபோர்டோவின் நிலத்தடி பகுதிகளில் குறிப்பிடத்தக்கச் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
