அமெரிக்காவுக்கு பேரிடி - குறிவைக்கப்படும் இராணுவ தளங்கள் : கடுந்தொனியில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஈரானிய (Iran) அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க (United States) இராணுவ தளங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற போராளிகள் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதற்கான அறிகுறிகளை அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
புரட்சிகர காவல் படை
ஈரான் ஆதரவு பெற்ற போராளிகள் ஒதுங்கி இருப்பதாகவும், ஈராக் அதிகாரிகள் அவர்களின் நடவடிக்கையைத் தடுக்க முயச்சிக்கின்றனர் என்றும் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், மேற்கு ஆசியாவில் உள்ள ஒவ்வொரு அமெரிக்க குடிமகனும் அல்லது ராணுவ வீரர்களும் இப்போது ஈரானின் இலக்காக மாறியுள்ளது என ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
אחרי העבודה האמריקנית בפורדו בטלוויזיה האיראנית מציגים את מפת הבסיסים האמריקניים באזור ואומרים לטראמפ: אתה התחלת ואנחנו נסיים pic.twitter.com/R8krFnXGZa
— roi kais • روعي كايس • רועי קייס (@kaisos1987) June 22, 2025
இது குறித்து ஈரான் மதகுரு கொமேனியின் நெருங்கிய உதவியாளர் ஹொசைன் ஷரியத்மதர் கூறுகையில், “ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா அத்துமீறி தாக்ககுதல் நடத்தியுள்ளது.
இதையடுத்து, சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக எதிர்த்தாக்குதல் நடத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய கிழக்கில் உள்ள முக்கிய அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்துள்ளது.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையை தாக்கவும், பிரிட்டிஷ், ஜெர்மனி, பிரெஞ்சு மற்றும் அமெரிக்க கப்பல்களுக்கு ஹோர்முஸ் ஜலசந்தியை மூடவும் ஈரானிய படைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
