யாழ் போதனா வைத்தியசாலையின் விசேட அறிவித்தல்!
யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலையின் வைத்திய கிளினிக் மற்றும் பிற கிளினிக்குகளுக்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்குமாறு வைத்தியசாலை நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது நிலவும் பலத்த மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக சேவைகளை மட்டுப்படுத்தி வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலநிலை சீரான பின் வழக்கமான சிகிச்சைகளைப் பெற முடியும் என்பதையும் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடுமையான பாதிப்பு
விசேடமாக நாளை (28.11.2025) யாழ் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்படலாம் என எதிர்வு கூறப்படுவதால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிளினிக் மருந்துகள் கைவசம் இல்லாதவர்கள் கட்டாயம் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அல்லது, இயலாமை இருப்பின், கிளினிக் கொப்பிகளை அனுப்பி மருந்துகளைப் பெறவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்கள் தேவையெனில், 070 1222261 தொலைபேசி மற்றும் வட்ஸ்அப் இலக்கத்தினூடாக வைத்தியசாலை அனர்த்த முகாம் பிரிவை தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


