வடக்கு ஆளுநரை சந்தித்த இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பவுல் ஸ்டீபன் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸை சந்தித்து கலந்துரையாடினார். 
இந்த சந்திப்பு இன்று(27) யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது,வடக்கிலுள்ள வளங்களை அடையாளப்படுத்தி புலம்பெயர் உறவுகள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என வடக்கு ஆளுநர் தெரிவித்தார்.
வேலையின்மை பிரச்சினை
இந்த விடயம் தொடர்பில் அவுஸ்திரேலிய வாழ் இலங்கை புலம்பெயர் உறவுகளுக்கு தெளிவுபடுத்துமாறும் உயர்ஸ்தானிகரிடம் ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் தொழிற்துறையை மேம்படுத்துவதனூடாக வேலையின்மை பிரச்சினை தீர்க்கப்படுவதுடன், பொருளாதார நிலையிலும் முன்னேற்றத்தை காண முடியும் என ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
வடக்கில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்
இதன்போது, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக வடக்கில் முன்னெடுக்கப்பட்ட மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர், ஆளுநருக்கு தெளிவுப்படுத்தினார்.

அத்துடன் வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  | 


                                        
                                                                                                                        
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்