சஷீந்திர ராஜபக்சவுக்கு பிணை!
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவுக்கு பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது தீக்கிரையாக்கப்பட்ட செவனகல - கிரிப்பன் வெவ பகுதியில் உள்ள அரசாங்க நிலத்திற்கு மற்றொரு நபர் மூலம் சட்டவிரோதமாக 8,850,000 ரூபாயை இழப்பீடாக பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.
சஷீந்திர ராஜபக்ச கைது
நுகேகொடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் சஷீந்திர ராஜபக்சவை கடந்த ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி காலை கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட சஷீந்திர ராஜபக்ச கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிரந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் , கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிணை மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று அவரை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
