கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரின் வீட்டுப் பணிப்பெண்: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் (Keheliya Rambukwella) வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பிணை உத்தரவை கொழும்பு (Colombo) தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (17) பிறப்பித்துள்ளார்.
இதன்படி, தலா ஒரு மில்லியன் ரூபாய் இரண்டு தனிப்பட்ட பிணைகளை விதித்த நீதவான், சந்தேக நபர் வெளிநாடு செல்ல தடை விதிக்கவும் பிணைதாரர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
அரசாங்க சம்பளம்
சுகாதார அமைச்சகத்திற்கு பெயரளவு நியமனங்களை வழங்கியதன் மூலம் அரசாங்க சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளை தவறாகப் பயன்படுத்தியதற்காக குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனடிப்படையில், கடந்த 11 ஆம் திகதி லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவால் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
