பேரீச்சம்பழத்திற்கு தடை -இஸ்லாமிய மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி
அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியலுக்குள் உள்ளடக்கப்பட்டு அரசாங்கத்தால் பேரீச்சம்பழத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இஸ்லாமிய மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி நோன்பு காலத்திற்கு தேவையான பேரீச்சம்பழம் இல்லாத காரணத்தினாலேயே இஸ்லாமிய மக்கள் தமது வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெவடகஹ பெரிய பள்ளிவாசலின் தலைவர் ரியாஸ் சாலி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய மரபுகளுக்கு அமைய நோன்பு காலத்தில் இஸ்லாமிய மக்கள் மூன்று பேரீச்சம் பழங்களை உணவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தநிலையில் இஸ்லாமிய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 40 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் நோன்பு காலத்திற்கு போதுமான பேரீச்சம்பழம் இல்லை என பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
