நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறையை நீக்க வேண்டும் - சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த கோரிக்கை
நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறையை, குறிப்பிட்ட காலத்திற்குள் நீக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
15 பேர் கொண்ட அனைத்துக் கட்சி அமைச்சரவையையும், அதற்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய ஆலோசனை சபை ஒன்றையும் நிறுவ வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்காக 20 ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கி, 19 ஆம் திருத்தச் சட்டத்தை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதேவேளை, அவநம்பிக்கை பிரேரணை கொண்டுவரப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டாலும், நிறைவேற்றப்படாவிட்டாலும், தேசிய அரசாங்கத்தை நிறுவி, குறைந்தபட்ச வேலைத்திட்டத்துடன் செயற்படல் வேண்டும் என்ற யோசனைகளைத் தாம் முன்வைத்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்