அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுடன் ஏற்பட்டுள்ள முரண்பாடு! தீர்வு காண களயமிறங்கும் பஷில்

srilanka basil rajapaksa
By Vasanth Apr 09, 2021 11:52 AM GMT
Report

மாகாண சபை தேர்தலை நடத்தவதற்கு முன்னர் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும்.

கூட்டணிக்குள் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சி தலைவர்கள், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் மற்றும் தலைவர் ஆகியோர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் வாரம் இடம் பெறவுள்ளது.

முரண்பாடுகளுடன் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டால் பெறுபேறு சாதகமாக அமையாது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நிகழ்கால அரசியல் நிலவரம் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், காலவரயறையின்றிய வகையில் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

பழைய தேர்தல் முறைமையில் மாகாண சபை தேர்தலை நடத்தும் அமைச்சரவை யோசனை முன்வைக்கப்பட்டது.

சமர்ப்பிக்கப்பட்ட யோசனை குறித்து அமைச்சரவை மட்டத்தில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. மாறாக கட்சி தலைவர் கூட்டத்தில் மாகாணசபை தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

எல்லை நிர்ணய பிரச்சினை, மாகாண சபை தேர்தல் முறைமை ஆகிய இரு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சமர்ப்பித்த யோசனையில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

பழைய தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த அமைச்சரவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.

மாகாண சபையில் எல்லை நிர்ணய விவகாரம் பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது. இதற்கு தீர்வு காணாமல் தேர்தலை நடத்துவது பயனற்றது.

எல்லை நிர்ணய பிரச்சினை, மாகாண சபை தேர்தல் முறைமை ஆகிய இரு விடயங்களை முன்வைத்து அமைச்சரவை கூட்டத்தில் மாறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்தே கட்சி தலைவர் கூட்டத்தில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண யோசனை எட்டப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் ஆளும் கட்சிக்கும் அதாவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும், ஏனைய பங்காளி கட்சிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.

மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் இப்பிரச்சினைக்கு தீர்வை காண்பது அவசியமாகும். பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு கூட்டணியை பலப்படுத்த பங்காளி கட்சிகளுக்கும், பொதுஜன பெரனவின் சிரேஷ்ட தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் வாரம் இடம் பெறவுள்ளது.

மாகாண சபை தேர்தலில் சுதந்திர கட்சியினர் தனித்து செல்வதாக சுதந்திர கட்சி உறுப்பினர்களும், சுதந்திர கட்சி தனித்து சென்றால் தமக்கு பாதிப்பு இல்லை என பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்களும் போட்டித்தன்மையில் குறிப்பிட்டுக் கொள்வதை காண முடிகிறது.

அனைத்து தரப்பினரையும் ஒன்றினைத்தே இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றோம்.

கூட்டணியின் ஒன்றினைப்பின் காரணமாகவே நாட்டு மக்கள் முழுமையான ஆட்சியதிகாரத்தை வழங்கியுள்ளார்கள்.

ஆகவே மாகாண சபை தேர்தலிலும் ஒன்றினைந்து போட்டியிடாமல் கூட்டணிக்குள் முரண்பட்டுக் கொண்டால் தேர்தலின் பெறுபேறு அரசாங்கத்திற்கு பாதகமாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி