அமெரிக்காவில் பதுங்கியுள்ள பசிலுக்கு விரைவில் கை விலங்கிடப்படும்! ஜனாதிபதி திட்டவட்டம்
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே இதனை கூறியுள்ளனர்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,
விரைவில் கைது
பல குற்றவாளிகள் நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். விரைவில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என பல குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பலருக்கு விசாரணைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, பலர் மீதான வழக்குகள் உள்ளன. சிலருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இங்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு, பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, பின்னர் சிவப்பு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்ட ஒருவர் அமெரிக்காவில் சென்று பதுங்கியிருக்கின்றார்.
நிச்சயம் அவர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு கைது செய்யப்படுவார் என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதனையடுத்து, பசில் ராஜபக்சவை கைது செய்யுமாறு பின்னர் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதனையும் தாண்டி, பசில் ராஜபக்சவுக்கு எதிராக மீண்டும் பகிரங்க சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்றைய ஜனாதிபதியின் உரையில், எதிர்வரும் நாட்களில் பசில் ராஜபக்சவை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 8 மணி நேரம் முன்