மட்டக்களப்பில் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் கைது செய்யப்பட்டோர் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு!
மட்டக்ளப்பு ஏறாவூர் காவல்துறை பிரிவில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் நால்வரும் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சட்டமா அதிபரின் ஆலோசனை தொடர்பான கடித்தின் படி குறித்த வழக்கிற்கான நகர்த்தல் மனு நீதிமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வேளை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி கருப்பையா ஜீவராணியினால் பிணை வழங்கப்பட்டள்ளது.
கடந்த 2020 நவம்பர் 27 ஆம், 28 ஆம் திகதிகளில், ஏறாவூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட செங்கலடி சித்தாண்டி ஏறாவூர் மற்றும் ஐயங்கேணி போன்ற பகுதிகளைச் சேர்ந்த க.சோபனன், யோ.யோகேஸ்வரன் , வ.விவேந்த், க.ஜெகநாதன் ஆகியவர்ளே இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் முகப் புத்தகத்தில், சிறிலங்கா அரசினால் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரின் புகைப்படத்தினை பதிவிட்டதன் காரணமாக ஏறாவூர் காவல்துறையினரால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் செய்யப்பட்டிருந்தனர்.
சுமார் 13 மாதம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த நால்வர் சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கினங்க இன்று அவர்களுக்கு தலா 02 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்டடிவர்கள் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் ஏறாவூர் காவல் நிலைத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.