மட்டக்களப்பில் வீடொன்றினுள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
police
death
investigation
batticalo
By Kalaimathy
மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
செல்வரெட்ணம் செல்வகுலேந்திரன் எனும் 73 வயது மதிக்கதக்க ஒருவரே இவ்வாறு சடலலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இரவு உறக்கத்திற்கு சென்றிருந்த நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தும் படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


