பிள்ளையான் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட வீதி அபிவிருத்தி திட்டத்தில் பாரிய மணல் கொள்ளை!

police batticalo santhirakanthan chenkalady sithandy
By Kalaimathy Sep 14, 2021 04:43 AM GMT
Report

வீதி அபிவிருத்தி என்ற போர்வையில் சித்தாண்டி சந்தனமடுவில் பாரிய மணல் கொள்ளை இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு செங்கலடி செயலாளர் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி மூன்று கிராம சேவகர் பிரிவிலுள்ள சந்தனமாடு ஆற்றில் அண்மைய தினங்களாக இரவு வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழப்பட்டு வருவதாக தெரிவித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆற்றில் 2015ஆம் ஆண்டில் இருந்து தற்பொழுது வரைக்குமான காலப் பகுதியில் மணல் அகழ்வு முற்றுமுழுதாக இடைநிறுத்தப்பட்டு தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது வீதி அபிவிருத்தி என்ற போர்வையில் சித்தாண்டி சந்தனமடு ஆற்றி பாரிய சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவித்து ஏறாவூர் போலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மணல் அழ்வை தடுக்க வேண்டும் எனத் தொரிவித்து அக்காலப் பகுதியில் 11 இளைஞர்கள் சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் உண்ணாவிதம் இருந்து மணல் அகழ்வை முற்று முழுதாக நிறுத்தினர். கடந்த ஜூன் மாதம் 19ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் தலைமையில் சித்தாண்டி புதுவழி பிள்ளையார் ஆலயத்திலிருந்து சந்தனமடு ஊடாக இரண்டு கிலோமீட்டர் கொங்கிறீட் வீதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு தற்பொழுது குறித்த வீதி அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

வீதியானது வீதி அதிகார சபையினால் ஒப்பந்தக்காரர் ஒருவருக்கு வழங்கப்பட்டு அபிவிருத்தி இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் வீதி அபிவிருத்திக்கு தேவையான மணலை இரவு வேளையில் சுமார் 300 கீப் அளவிலான 7 மணல் குவியல்களாக குவிக்கப்பட்டு பாரிய சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றிருக்கின்றதாக அப்பகுதியைச் சேர்ந்த பலர் தெரிவிக்கின்றார்கள்.

மணல் அகழ்வு இடம்பெற்ற இடத்திலிருந்து  சுமார் மூன்று கிலோமீட்டர் வரையிலான ஆற்று மணல் பரப்பில் தொடர்ச்சியாக கடந்த 6 வருடங்களுக்கு மேலாக பனம் பழ விதைகள் நடப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டியில் பாரிய வெள்ளம் ஏற்பட்டு வருகின்ற நிலையில் அதற்குக் காரணமாக இருக்கின்ற மணல் அகழ்வை தடுத்து நிறுத்துவதற்காக கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக சித்தாண்டி சிகண்டி அறக்கட்டளை நிலையம் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து குறித்த பகுதியில் தொடர்ச்சியாக விதை நடப்பட்ட நிலையில் பனை மரங்கள் வளர்ந்து வருகின்றது.

குறித்த பகுதியில் அடிக்கடி சட்டவிரோத மணல் அழ்வில் ஈடுபடுகின்ற ஒரு சில நபர்களுக்கு, இணக்க சபை மூலமாக பனம் விதைகள் நடப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், சூழலையும் வெள்ளப் பெருக்கையும் குறித்த ஆற்றினுடைய நிலப்பரப்பையும் பாதுகாத்துக் கொள்வதற்காக இவ்வாறாக நடப்படுகின்றது. இந்நிலையிலேயே வீதியின் அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தக்காரர்கள் மூலமாக இந்த மணல் அகழ்வு இரவோடிரவாக அப்பகுதியில் இருந்து அகழப்பட்டிருப்பதாக பொது அமைப்புக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பல பனை மரங்கள் பிடுங்கி வீசப்பட்டும் பல மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இவ்வாறான நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் மு. முரளிதரன் உட்பட சிகண்டி அறக்கட்டளை நிலைய உறுப்பினர்கள் அப்பகுதிக்கு பொறுப்பான கிராமசேவகர் உட்பட பலர் நேற்று பிற்பகல் சென்று பார்வையிட்டதுடன் கருத்துக்களையும் தெரிவித்தனர்.

பின்னர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தனர். அதன் பின்னர் முறைப்பாடு செய்த பிரதேச சபை உறுப்பினர் உட்பட பொலிஸார் மற்றும் அதிகாரிகள் பலரும் குறித்த இடத்தை பார்வையிட்டனர். பொலிஸார்  அந்த இடத்தை பார்வையிட்டதுடன் ஆதாரங்களையும்  பெற்றுக் கொண்டனர்.

வெள்ளப்பெருக்கை தடுப்பதற்காக ஆற்றின் மணல் பகுதியில் பனம் விதைகள் நடப்பட்டு அவை அழிக்கப்பட்டு அபிவிருத்தி என்ற போர்வையில் ஆற்று மணலை இரவோடு இரவாக கபளீகரம் செய்யும் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும்  குறித்த விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கிறோம் பொலிஸான் முறையான தீர்வு கிடைக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாட இருக்கின்றோம் எனவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026