மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்று- மேற்கொள்ளப்பட்டுள்ள விசேட தீர்மானம்!

corona valaichenai meeting batticalo
By Kalaimathy May 05, 2021 06:10 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

நாட்டில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. அந்தவகையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மக்களின் பாதுகாப்பு கருதி வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அவசர கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் மக்களை விழிப்பூட்டும் வகையில் வழிபாட்டு தலங்கள், பிரதேச சபை, பொலிஸார் மற்றும் கிராம அதிகாரி ஆகியோர் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல் வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திற்கு தனி நபர்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

அத்தோடு இம்மாதம் 20ஆம் திகதி வரை மத வழிபாட்டுத் தலங்களில் திருவிழாக்கள் நடத்துவதற்கு தடை, வியாபார நிலையங்கள் மற்றும் பொது இடங்கள், திணைக்களங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மக்கள் வருகை தர வேண்டும், அதனை மீறும் பட்சத்தில் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலை மீறி பிரத்தியேக வகுப்புகள், பொது இடங்களில் கூட்டங்கள், திருமண நிகழ்வுகள் நடைபெறும் பட்சத்தில் அனைவரும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்து தனிமைப்படுத்தப்பட உள்ளதுடன், அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை கருதி ஒரு குடும்பத்தில் இருவர் மாத்திரமே சுகாதார முறையில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி பேணி செல்ல வேண்டுமென்றும், தேவையற்ற விதமாக வெளியில் செல்லாது பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டதுடன், பிரதேசத்தில் கொரோனா வைரஸ் அதிகரிக்காத வகையில் அனைவரும் செயற்படுமாறும், இதற்கு அனைத்து தரப்பினரும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. 

வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ், வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், உதவி பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக முகாமையாளர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், செயலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை, கல்குடா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025