புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
6 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தம் 2027 ஆம் ஆண்டில் தொடங்கப்பட உள்ளதாகவும், அது தொடர்பான அனைத்து பாடத்திட்டங்களும் சிறப்புக் குழுக்கள் மூலம் முழுமையாக மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கல்வி சீர்திருத்தத்திற்கான நாடாளுமன்ற உட்குழு தெரிவித்துள்ளது.
கல்வி சீர்திருத்தத்திற்கான நாடாளுமன்ற உட்குழு, பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (17) நாடாளுமன்றத்தில் கூடிய போது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எதிர்கால நடவடிக்கைகள்
புதிய கல்வி சீர்திருத்த செயல்முறையின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட 1 ஆம் வகுப்புக்கான புதிய கல்வி சீர்திருத்த செயல்முறையின் முன்னேற்றம் எதிர்காலத்தில் கண்காணிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகள் தொடர்பான பரிந்துரைகளைப் பெறுவதற்காக வெளிநாட்டு வள நபர்களின் பங்கேற்புடன் ஒரு சிறப்புக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், அது தொடர்பான வள நபர்கள் எதிர்காலத்தில் இலங்கைக்கு வருகை தர உள்ளனர்.
கல்விக்கான தேசிய வழிகாட்டுதல் குழு
கல்விக்கான தேசிய வழிகாட்டுதல் குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவை அறிக்கை, ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களின்படி அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், எதிர்காலத்தில் மாவட்ட மற்றும் மாகாண அளவிலான வழிகாட்டுதல் குழுக்களை நியமிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், முதலாம் வகுப்பின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளுக்கு செயல்பாடு சார்ந்த புத்தகங்களை அச்சிடத் திட்டமிட்டுள்ளதாகவும், ஏப்ரல் பாடசாலை விடுமுறைக்குப் பிறகு இரண்டாம் தவணைக்கான செய்முறை செயல்பாட்டுப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |